Monday, May 10, 2010

நட்சத்திரங்களுள் நாம்

வட்டநிலா அழகுதான்,
வளம் கொண்ட நட்சத்திரம் இல்லாவிடினும்,
ஓராயிரம் தாரகைதான் ஒரு வானில் வீற்றிருப்பினும்,
ஒற்றைச் சந்திரன் ஒளியை மிஞ்சிவிடுமோ?

வட்ட வட்டமாய் ஆயிரம் நிலாக்கள்,
ஒரு வானம் சேர்ந்தாலும்,
கண்கள்தான் காண சகிக்குமோ?

வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கென கோணங்கள்
நிலையில்லாயிருக்கும்,
நட்சத்திரம் இல்லாவிடில் வானம்தான்,
முழுமைபெறுமோ?

இதில் நிலாக்களாய் பிறர் இருக்கலாம்,
நட்சத்திரங்களுள் நாமிருக்கலாம்,

தாழ்வெண்ணம் வேண்டாம்,
பெருமிதம் கொள்ளுங்கள்,
பூமிக்கு விளக்காய்
நாமும் இருந்திருக்கிறோம்.

No comments:

Post a Comment