Monday, May 10, 2010

வயிற்றெரிச்சல்


வறுமை காணாத வருமானம்
கணவனுக்கு,
கோயிலுக்கே வந்தாலும் கழுத்தை விட்டு இறங்காத
நகைகள் மனைவிக்கு,
நினைத்தவுடன் வந்து சேரும் புத்தம் புது
பொருட்கள் வீட்டுக்கு,
ஆள் நடமாடும் தெருவிலும் விருட்டென போகும்
வாகனம் திமிருக்கு,
அனைவரும் வியக்கும் அளவு அபரீத
முன்னேற்றம் அவர்களுக்கு,
இருந்தும் அக்கம் பக்கத்தில் துரும்பே வாங்கினாலும்
போவார்கள் மாந்திரீகத்துக்கு!

No comments:

Post a Comment