தமிழா,தமிழா......தமிழா திகைத்துப் போனாயோ?
அழைத்தக் குரலில் அறியாதொரு மொழிக்கேட்டாயோ?
அறிந்தே அறியாதவன் போல் சென்றாயோ?
எதற்கையா மேடைக்கூத்தாடிப் போல் தினமொரு நாடகம்?
உண்மையாய் ஒரு விடயம் சொல்கிறேன்,
எச்சில் பட்டு நுனிநாக்கு நனைப்பதல்லவே மொழி,
உன்னைக் காக்கும்,உன் பரம்பரைக் காக்கும்,
உன் மானம் நழுவாமல் தமிழது காக்கும் – தமிழனே
வேடம் களை,தொன்மைத் தொட்ட தமிழைத் திளை,
அவசியமில்லை உன் உரிமைக்கு உதிரம் நரபலி நாளை.
No comments:
Post a Comment